internet

img

ஆப் ஸ்டோரில் மீண்டும் முதல் வரிசையில் டிக் டாக்!

தடை நீக்கப்பட்டு ஒரு வாரத்தில், கூகுள் பிளே ஸ்டோரில் முதல் வரிசையிலும், ஐஓஎஸ் இலவச ஆப்களில் முதலிடத்தில் இருப்பதாகவும் டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம், டிக் டாக் செயலி சமூக கலாச்சாரத்தை சீரழிப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிக் டாக் ஆப்பிற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் நீக்கம் செய்யப்பட்டது. இதனால் டிக் டாக் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்து. 

இதனை அடுத்து, ஒரு நாளைக்கு 3.48 கோடி ரூபாய் நஷ்டமடைவதாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், தடை நீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கு மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாறியது. 

இதைத் தொடர்ந்து, டிக் டாக் செயலியில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டிக் டாக் ஆப்பை பயன்படுத்த முடியாது என்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வாக்குறுதி அளித்தது. இதன் பின்னர் டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் 200 மில்லயன் டிக் டாக் பயனர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும், ”ரிடர்ன் ஆஃப் டிக் டாக்” என்று பிரச்சாரம் செய்து வருவதாகவும் மற்றும் தடை நீக்கப்பட்டு ஒரு வாரத்தில், கூகுள் பிளே ஸ்டோரில் முதல் வரிசையிலும், ஐஓஎஸ் இலவச ஆப்களில் முதலிடத்தில் இருப்பதாகவும் டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.