பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள், ஸ்மார்ட் போன்களை எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில், ’கே4 கீபோர்ட்’ என்ற புதிய செயலி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த செயலியை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அதனை அறிமுகம் செய்தார். செல்போன் தொடுதிரையை விரைவாக பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை நாளை முதல் கூகுள் பிளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலிக்கு, 6 மாதங்களுக்கு 70 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 விசைப்பலகைகளை கொண்ட இந்த செயலியில், தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு உட்பட 100 மொழிகளை பயன்படுத்த முடியும். மேலும் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்து செயலியை வாங்கவும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.