கரூர், செப்.17- தமிழகம் முழுவதும் 820 மின்சார பேருந்துகள் இன்னும் ஓர் ஆண்டுக்குள் இயக்கப்ப டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தூர் தடுப்பணையை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மின்சார பேருந்துகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றி ருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களி லும் விரைவில் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூ தியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு ஆயிரத்து 97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான அரசாணையும் வெளி யிட்டிருப்பதாகவும், இந்த வாரத் திற்குள் பயனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்க முதலமைச்சர் நட வடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.