india

img

ராஜஸ்தானில் நாய்களிடம் இருந்த தப்ப, ரயில்நிலையத்திற்கு ஓடிய 2 மாணவர்கள் ரயில் மோதி உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் நாய்களிடம் இருந்து தப்ப, ரயில் நிலையம் நோக்கி ஓடியபோது சரக்கு ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அனன்யா கன்வர் (9) மற்றும் யுவராஜ் சிங் (11) ஆகிய 2 குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு வீட்டிலிருந்து சில செல்ல நாய்கள் அவர்களைத் துரத்த ஆரம்பித்தன. துரத்தும் நாய்களிடம் இருந்து தப்பிக்க ரயில் நிலையம் நோக்கி ஓடியபோது சரக்கு ரயில் மோதி அடிபட்டு உயிரிழந்தனர்.

பனாட் கான்ட் ரயில் நிலையத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குழந்தைகளின் பெற்றோர், அண்டை வீட்டாருடன் சேர்ந்து  நாய்களின் உரிமையாளருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி உடல்களை ஏற்க மறுத்துவிட்டனர், மேலும் செல்லப்பிராணிகளை உடனடியாக நாய்களை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், ஜோத்பூர் மாநகராட்சியின் நாய் பிடிப்பவர்களை அழைத்தனர். அவர்கள் நாய்களை பிடித்ததையடுத்து குழந்தைகளின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.