india

img

ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி...

 புனே:
ரஷ்யாவின் ஸ்புட்னிக்கொரோனா தடுப்பூசியைதயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால்மோடி அரசு, மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்கவில்லை என்று அரசியல் கட்சியினர்மற்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.இந்நிலையில்  இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசியை பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. ரஷ்யாவின் தொற்று நோய்வியல் மற்றும் நுண் உயிரியலில் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்  தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதனையடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக்  தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் உரிமம் நீக்கப்படும் என்றுஇந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

;