india

img

ஐ.ஐ.டி-யில் நவீன தீண்டாமை - எதிர்த்து போராடிய மாணவர்களுக்கு அபராதம்

மும்பை ஐ.ஐ.டி-யில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டும் தனி மேஜைகள் அமைக்கப்பட்டதை கண்டித்த மாணவர்களுக்கு ரு.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை ஐ.ஐ.டி-யில் செயல்படும் 3 விடுதிகளுக்கு பொதுவாக உள்ள உணவகத்தில் 6 மேஜைகள் சைவ மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதாகவும், இந்த சைவ உணவு கொள்கையை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்  என்று கடந்த வாரம் உணவக கவுன்சில்  மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டும் தனி மேஜைகள் அமைக்கப்பட்டதை கண்டித்த மாணவர்களுக்கு ரு.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, நவீன காலத்தில் தீண்டாமையை நிலைநாட்டும் சாதி பஞ்சாயத்து போன்றது என அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் தெரிவித்துள்ளது.