மக்களவை தேர்தல் முடிந்த பின்பு அக்டோபர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டமன்ற தேர் தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ள நிலையில், தோல்வி பயத்தால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போதே தங்களுக்கு வாக்களிக்கும் வேண்டும் என அனைத்து நிகழ்வுகளிலும் கெஞ்சி கூத்தாடி வரு கின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வ ராக உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் கட்சி யான சிவசேனாவின் (ஷிண்டே) எம்எல்ஏ சந்தோஷ் பங்கார் (கலாம்நூரி தொகுதி), ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பொழுது 3-ஆம் வகுப்பு படிக்கும் (தோரா யமாக) குழந்தைகளிடம், “அடுத்த தேர்த லில் உங்கள் பெற்றோர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் இரண்டு நாள்கள் சாப்பிட வேண்டாம்” என கூறியுள்ளார்.
தேர்தல் என்றால் என்னவென்று தெரியாத 3-ஆம் வகுப்பு படிக்கும் மழலை களிடம் வாக்களிக்காவிட்டால் சாப்பிட கூடாது என்று கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.