india

img

ஐபிஎல் 2022 நடந்த மைதானங்களின் பொறுப்பாளர்கள், பராமரிப்பாளர்களுக்கு 1.25 கோடி பரிசுத்தொகை: பிசிசிஐ அறிவிப்பு

ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டிகள் நடந்த 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரம்மாண்ட ஐபிஎல் 2022 இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.  

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் உள்ள 4 மைதானங்களில் நடைபெற்றது. மேலும் பிளே ஆப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற்றது.

இந்த நிலையில் 6 மைதானங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ரூ. 1.25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிசிஐ, வான்கடே, டிஒய் பாட்டீல் மற்றும் எம்சிஏ ஆகிய மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், புனேவின் ஈடன் கார்டன்ஸ் மற்றும் நரேந்திர மோடி மைதானத்துக்கு தலா ரூ.12.5 லட்சமும் பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் தொடர் நடைபெற்ற 6 மைதானங்களை சேர்ந்தவர்களுக்கும் இந்த பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

;