ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது முதியவர் மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி, நியூயார்க்கிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் சங்கர் மிஸ்ரா என்ற நபர், 70 வயது முதியவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்துகொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சங்கர் மிஸ்ராவை பெங்களூருவில் வைத்து தில்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
அவர் மீது ஐபிசி பிரிவுகள் 294, 354, 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.