சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, தெலுங்குதேசம் - ஜனசேனா - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. மக் கள் நலன் பணியை விட முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நிக ழ்ந்த ஊழல் மற்றும் இதர சம்பவங்களை விசாரிப்பதிலேயே தெலுங்குதேச அரசு முனைப்பு காட்டி வருகிறது. காரணம் ஜெகன் மோகன் தனது ஆட்சிக் காலத்தில் தெலுங்கு தேச தலைவரும், தற்போ தைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைத்தார். இத னால் ஜெகன் மோகன் ஆட்சியின் ஊழல் சம்பவங்களை தெலுங்கு தேச அரசு தோண்டி எடுக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளது.
இதன்முதல்படியாக விசாகப்பட்டி னம் மலை அடிவாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சுமார் ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை ஒன்றினை கட்டியுள்ளதாக தெலுங்குதேசம் எம்எல்ஏ கண்டா ஸ்ரீனிவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “9.88 ஏக்கர் பரப்பளவில் கடலை பார்த்தவாறு கட்டப் பட்ட இந்த ரகசிய மாளிகையை ஜெக னின் முகாம் அலுவலமாக மாற்றுவதற் கான ஏற்பாடு தயாராகி வந்துள்ளது. மலை அடிவாரத்தில் மாளிகையை கட்டு வதற்காக ருஷிகொண்டாவில் ஆண் டுக்கு ரூ.8 கோடி வரை வருமானம் ஈட்டித் தந்த அரசின் சுற்றுலா ரிசார்ட்டுகள் இடிக் கப்பட்டுள்ளன. இந்த மாளிகையில் நிறு வப்பட்டுள்ள பாத் டப்பின் விலை மட்டும் ரூ.26 லட்சம் ஆகும். பார்ப்பதற்கு இராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேன் அரண்மனை போல் உள்ளது. மாளிகை யின் கட்டுமானச் செலவுகள், ஒப்பந்த விவ ரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள் ளன” எனக் கூறியுள்ளார். இது ஆந்திரா வில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.