india

img

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது

நடப்பாண்டு நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு சம்ப வங்கள் அரங்கேறியுள்ள நிலையில், இந்த முறைகேடு சம்பவங்கள் தொடர்பாக தொடரப்பட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகளை, கூட்டு வழக் காக உச்சநீதிமன்றம் விசாரித்து வரு கிறது. 

கடந்த வியாழனன்று நடைபெற்ற விசாரணையின் போது, சனிக்கிழமைக் குள் நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளி யிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்டு வழக்கை திங்கள்கிழமைக்கு தலை மை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒத்தி வைத்தார். அதன்படி, சனியன்று தேர்வு  மையம் மற்றும் நகர வாரியாக முடிவு களை என்டிஏ வெளியிட்டது. இதில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி யது.  இந்நிலையில், நீட் முறைகேடு தொடர்பாக திங்களன்று காலை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசார ணை தொடங்கியது. அப்போது மாண வர்கள் சார்பில்,”நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24 அன்று அனுப்பியுள்ளது. ஆனால் மே 3 அன்று தான் வங்கி  லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில்தான் வினாத்தாள் இருந்துள்ளது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப் படவில்லை” என்று வாதம் முன்வைக்கப் பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட  தலைமை நீதிபதி சந்திரசூட் முக்கிய பிரச்சனை தீவிரமானது எனக் கூறி,”பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு  உறுதியாகியுள்ளது. ஆனால் நாடு முழு வதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ள தா? என்பதை உறுதி செய்ய வேண்டும்” என கூறினார்.

3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு

நீட் வினாத்தாளில் 19ஆவது கேள்வி மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில்,”19ஆவது கேள்விக்கு சரியான விடையை கண்டுபிடிக்க 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க தில்லி ஐஐடிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். குறிப்பாக 3 பேர் கொண்ட நிபுணர் குழு செவ்வாயன்று நண்பகல் 12 மணிக்கு சரியான  விடையை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தில்லி ஐஐடி நிபுணர் குழு அளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.