“விக்கிரவாண்டி தொகுதியில் 40 சதவிகிதமாக இருந்த திமுக வாக்கு தற்போது 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதிமுகவினர் வாழ்வில் முதல் முறையாக திமுகவிற்கு வாக்களிக்கிற சூழ்நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இரட்டைக் குழல் துப்பாக்கி போல திராவிட கொள்கையில் எதிரெதிர் துருவமாக பயணித்து வந்த திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளில் அதிமுக பலவீனம் ஆகும் பொழுது திராவிடம் என்று திமுக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. அதனுடைய பாதிப்பு அதிமுகவிற்கு வருகிறது. அது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல!” என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.