india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவைப் பற்றி பொய்களை பரப்புவதில் வாடிக்கையான குற்றவாளி. வயநாட்டில் வரவிருக்கும் பேரழிவு குறித்து ஒன்றிய அரசு எச்சரித்தும், கேரள மாநிலம் பதிலளிக்கவில்லை என்று அவர் கூறியது, முற்றிலும் தவறானது மற்றொரு அப்பட்டமான பொய் ஆகும்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

ஒன்றிய அரசின் உணர்வின்மையால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது அரசு மீண்டும் தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக ஏற்கவேண்டும்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

விவசாயிகள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளால் தாக்கும் மூர்க்கத்தனத்தை கைவிட்டு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

திமுக நாடாளுமன்ற தலைவர் கனிமொழி

இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம்  ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் பதவியேற்பு விழாவை புறக்கணித்தோம். மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பொதுமக்களின் ஆணை அல்ல. இவிஎம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை.

சிவசேனா மூத்த தலைவர் ஆதித்யா தாக்கரே

புத்தாண்டு நெருங்குவதை அடுத்து டிசம்பர் இறுதி வாரத்தில் உள்நாட்டு சுற்றுலா நகரங்களு க்கு பயணிப்பதற்கான விமான கட்டணங்கள் கிடு கிடுவென உயர்த்தப்பட்டுள்ளன. டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மும்பையில் இருந்து ஸ்ரீநகர், டேராடூன், கொச்சின், போர்ட் பிளேர், மதுரை உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கான விமான கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்க ளாக சனிக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்ட னர். ஆனால் மகாயுதி கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே  உறுப்பினர்களாக பதவியேற்றனர். மகா விகாஸ் கூட்டணியில் சிவசேனா (உத்தவ்), தேசிய வாத காங்கிரஸ் (சரத்), காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பி னர்கள் பதவியேற்கவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டம் தமோராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் நன்றாக படிக்காததை கண்டித்ததற்காக தலைமை யாசிரியர் எஸ்.கே.சக்சேனாவை (55) மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

தெலுங்கானா மாநிலம் யாதார்திரி புவனகிரி மாவட்டம் ஜலால்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 6 பேரில் மணிகண்டா என்பவ ருக்கு மட்டும் நீச்சல் தெரிந்ததால் அவர் ஏரியில் இருந்து வெளியேறி உயிர்தப்பினார். மற்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் சனிக்கிழ மையன்று அதிகாலை மிதமான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர்  ஆழத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3-ஆக பதிவாகியது. இந்த மிதமான நிலநடுக்கத் தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் மட்டும் லேசான அளவில் குலுங்கின.

மும்பை

அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துக்கள் விடுவிப்பு

கடந்த 2021ஆம் ஆண்டு சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கி ரஸ் கூட்டணி ஆட்சியின் பொழுது பினாமி சட்டத்தின் கீழ் அஜித் பவாருக்கு (அப்போதைய தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர்) சொந்தமான ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களைக் வருமான வரித்துறை முடக்கியது.

இத்தகைய சூழலில் பாஜக கூட்டணியில் இணைந்ததற்கு கைமாறாக முடக்கி வைத்து இருந்த அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துக்களை வருமான வரித்துறை தற்போது விடுவித்துள்ளது. மேலும் பாஜக கூட்டணியில் இணைந்த தற்காக அவர் மீதான பினாமி வழக்கும்  ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.