'இன்கோவாக்’ எனும் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்கோவாக் (iNCOVACC) கொரோனா தடுப்பு மருந்தை வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த மருந்துக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டராக செயல்படவுள்ள தடுப்பு மருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.