india

img

ரூ.17,082 கோடியில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் நிலவும் ஊட்டச் சத்துக் குறைபாட்டைக் குறைப்ப தற்கு 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை 112 மாவட்டங்களில் செறிவூட்டப் பட்ட அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டு மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் இது வரை வெளியிடப்படவில்லை. அனைத்து  மாநிலங்களிலும் பொது விநியோக முறை, மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட  அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் செறி வூட்டப்பட்ட அரிசியை (Fortified rice)  வழங்க ஒன்றிய அரசு சமீபத்தில் உத்தர விட்டு இருந்தது.

இந்நிலையில், புதுதில்லியில் புத னன்று பிரதமர் மோடி தலைமையில் நடை பெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்  தில் ரூ.17,082 கோடியில் செறி வூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்துக்கு  ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யுள்ளது.