india

img

ப்ரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு  

மொபைல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.  

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் வெளியிட்டுள்ள உத்தரவில், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒருமாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 30 நாள்கள் செல்லுபடியாகும் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களை வழங்கவேண்டும் என்று டிராய் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.  

அதன்படி திட்ட வவுச்சர், சிறப்பு டாரிஃப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் செல்லுபடியாகும் காலத்தை 30 நாள்கள் நிர்ணயிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

;