india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தி பேசியதாக சாமியார் ராம்கிரி மஹாராஜ்க்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது காவல் நிலையத்தை தாக்கி சூறையாடியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து உள்ளூர் முஸ்லிம் தலைவரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர். கார்களையும் புல்டோசரால் நசுக்கினார்கள்.

இந்திய எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிரோன் (mini UAV) ஒன்று, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. தொழில் நுட்ப கோளாரால் இது நடந்திருப்பதாகவும், டிரோனை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சனியன்று காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் கூட்டாக மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தை நடத்துகின்றன.

“பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2040இல் நிலவின் மேற்பரப்பில் இந்தியர் தரையிறங்குவார்” என்று ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

தகுதி பெறாத பணியாளர்களுடன் விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

“பட்டமளிப்பு விழாவில் கருப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம்” என்று ஒன்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் ஒன்றிய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லக்னோ
உ.பி.,யில் பள்ளி சுவர் சரிந்து விபத்து
40 குழந்தைகள் படுகாயம்; 5  குழந்தைகள் கவலைக்கிடம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கியில் உள் ளது அவாத் அகாடமி  என்ற தனியார் பள்ளி. இந்த பள்ளியில் முதல் தளத்தில் உள்ள பால்கனி வெள்ளி யன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 40 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். 40  குழந்தைகளும் பராபங்கி மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் 5 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். 

காலையில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்துக்குச் செல்வதற்காக முதல் மாடி பால்கனியில் மாணவர்கள் கூடிய போது, இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.