இந்தியாவின் புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பிரபல ஹாக்கி வீரர் தயான் சந்த், 1928இல் ஆம்ஸ்டெர்டாம், 1932இல் லாஸ் ஏஞ்சலஸ், 1936இல் பெர்லின் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் ஹாட்ரிக் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றெடுக்க முக்கிய காரணமாக இருந்தார். இப்போட்டிகளில் மட்டும் அவர் கோல்களை அடித்தார். இவர் பங்கெடுத்த 19 வருட ஹாக்கி போட்டிகளில் 185 ஆட்டங்களில் பங்கேற்றார். இவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 570 ஆகும். இவருக்கு கடந்த 1956ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதியை 'தேசிய விளையாட்டு தினம்' ஆக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் கொண்டாடுகிறது.