india

img

ரூ.12 லட்சம் கோடி ஊதியத்தை சுரண்டிய உலக முதலாளிகள்

புதுதில்லி, ஜன.20- உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தொழி லாளர்களின் 1.5 லட்சம் கோடி டாலர் ஊதியத்தை கார்ப்பரேட்டுகள் வெட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி  தகவல் ‘ஆக்ஸ்பாம்’ (Oxfam) வெளி யிட்ட அறிக்கை மூலம் தெரியவந் துள்ளது.

 “வளர்ந்த நாடுகள் தங்களின் காலனித்துவ கொள்ளையின் நீட்சி யான ‘நவ காலனித்துவம்’ எனப் படும் புதிய தாராளமய- தனியார்மய- உலகமயக் கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்தியத்தைப் பயன்படுத்தி, வளரும் நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை- அந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களை தொடர்ந்து குறைந்த கூலிக்கு சுரண்டுகின்றனர்.

இதுவே நீடிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு காரணம் ஆகும். உலகின் முதல் ஐந்து பணக்கா ரர்களின் சொத்து மதிப்பு 2020-ஆம்  ஆண்டிலிருந்து இரண்டு மடங்காகி யுள்ளது. அதே நேரத்தில் 480 கோடி  மக்கள் அல்லது உலகின் 60 சதவிகித மக்கள் மேலும் தீவிர வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால் உல கம் முழுவதும் ஒவ்வொரு நபரை யும் ‘வறுமையில் இல்லை’ என உறு திப்படுத்தவே 229 ஆண்டுகள் ஆகும்” என ‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை  எச்சரித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ‘டாவோஸ்’ நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட் டத்தில் இந்த அறிக்கையை ‘ஆக்ஸ்பாம்’ வெளியிட்டுள்ளது.  அதில், உலகிலுள்ள “1 சதவிகித  பெரும் பணக்காரர்கள் உலகத்தின்  மொத்த வளத்தில் 43 சதவிகி தத்தை கொண்டுள்ளனர்.

இதில்  ஆசிய முதலாளிகள் 50  சதவிகி தத்திற்கு மேலான சொத்துக்களை யும் ஐரோப்பிய முதலாளிகள் 47  சதவிகிதத்தையும் அபகரித்துள்ளனர். 

50 சதவிகித ஏழைகளிடம்8.5 சதவிகித சொத்துக்கள்

அதே வேளையில் உலகம் முழு வதும் 50 சதவிகித ஏழை மக்கள்,  வெறும் 8.5 சதவிகித சொத்துக்களு டன் ஏழைகளாக மட்டுமே நீடிக்  கின்றனர்” என்று கூறியிருக்கும்  ‘ஆக்ஸ்பாம்’, “பெரும்பான்மை யான தொழிலாளர்கள் அதிக நேரம்  ஆபத்தான சூழ்நிலையில் பணி புரிந்து அடிப்படை ஊதியத்தை விட  மிகக்குறைவான ஊதியமே பெறு கிறார்கள்; குறைந்த ஊதியத்தால் 79.1 கோடி தொழிலாளர்கள், மிகப் பெரிய அளவிற்கு அதிகரித்துள்ள பணவீக்கத்தோடு (விலைவாசி)  ஈடுகொடுக்க முடியாத சூழலில் சிக்கி  உள்ளனர்.

ரூ.12.47 லட்சம் கோடியை இழந்த தொழிலாளர்கள்

இவ்வாறான குறைவான ஊதி யம் மற்றும் ஊதிய வெட்டுக்களால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்  தொழிலாளர்கள், 1.5 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய்) ஊதியத்தை இழந்துள்ள னர் என்ற அதிர்ச்சி தகவலையும் ‘ஆக்ஸ்பாம்’ வெளியிட்டுள்ளது.

“உலகில் உள்ள 1600 பெரிய நிறு வனங்களில் வெறும் 0.4 சதவிகித நிறுவனங்கள் மட்டும்தான் குறைந்த பட்ச கூலியை தருவதற்கு பகிரங்க மாக ஒப்புக்கொள்ள முன்வந்துள் ளன” என்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சிஇஓ - பெண் தொழிலாளிக்கு 1200 ஆண்டுகள் இடைவெளி

இதுபோன்ற சுரண்டல்களால் “பெரும் பணக்காரருடன் ஒப்பிடுகை யில் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்ந்து பெரும் இடைவெளி யைக் கொண்டுள்ளது. அமெரிக்கா வைச் சேர்ந்த ‘பார்ச்சூன்’ ஏடு தர வரிசைப்படுத்திய உலகின் 100 முன்னணி நிறுவனங்களில் பணியாற் றும் தலைமை அதிகாரி ஒருவர், ஒரு வருடத்தில் சம்பாதிப்பதை சமூக அல்லது மருத்துவத் துறையில் பணிபுரியும் ஒரு பெண் தொழிலாளி சம்பாதிக்க சுமார் 1200 ஆண்டுகள் ஆகும்” என்பதை ‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை உதாரணமாக தெரி வித்துள்ளது. 

பெண்களின் உழைப்பு மூலம் மட்டும் ரூ. 89 லட்சம் கோடி சுரண்டல்

இத்தோடு ஊதியம் பெறாத பெண்களின் உழைப்பால் மட்டும் ஆண்டுக்கு 10.8 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 89 லட்சத்து 79 ஆயிரம் கோடி) வருமான கணக்குகளில் வராமலேயே கார்ப்பரேட்டுகளுக்கு லாபமாகிறது என்றும் இது உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்யும் பொருளாதார பங்கைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

உலகளாவிய இந்த சமத்துவ மின்மையை தீவிரமாக்கிய ஒரு ‘முக்கிய கருவி’ என்றால், அது ஏகபோக சக்தியின் வளர்ச்சியாகும். இந்த ஏகபோக வளர்ச்சியானது, சில பெருநிறுவனங்களை மட்டும், முழு பொருளாதாரத்தையும், ஏன், அரசாங்கத்தையே கையாளவும் மற்றும் அதன் மீது ஆதிக்கம் செலுத்தவும் அனுமதித்துள்ளது.

அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் கார்ப்பரேட்டுக்கள்

அதாவது விலைவாசி உயர்வு, தொழிலாளர் ஊதியத்தை கட்டுக்குள் வைத்து வெட்டுவது, அரசு நிறுவனங்களை தனியார்மய மாக்குதல், சுரண்டலுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வடிவமைப்பது,   தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது என தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொண்டுள்ளன.

“அமெரிக்காவில் உற்பத்தித் துறையில் தொழிலாளர் வருமானம் 76 சதவிகிதம் சரிந்துள்ளது; அதற்கு, ஏகபோக பெருநிறுவனங்களே காரணம்” என சர்வதேச நாணய நிதி யத்தின் (IMF) ஆய்வையும் ‘ஆக்ஸ்பாம்’ மேற்கோளிட்டு கூறி யுள்ளது.

ஏழைகளுக்கு கிடைக்காத உயிர் காக்கும் மருந்துகள்
“1995 மற்றும் 2015-க்கு இடை யில், 60 மருந்து நிறுவனங்கள் வெறும் 10 பெரு நிறுவனங்களாக இணைந்தன. இவற்றுக்கு கிடைத்த அரசாங்கத்தின் பொது நிதியுதவி மூலம் புதிய கண்டுபிடிப்புகள் பெருமளவில் சாத்தியமாகினாலும், ஏகபோக மருந்து நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை மற்றும் உலகளாவிய வர்த்தக விதிகளை ஆக்ரோஷமாகப் கட்டுப்படுத்தி உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்காத வகையில் மாற்றி விட்டன. இதை கொரோனா காலத்தில் கூட நம்மால் பார்க்க முடிந்தது. 

கார்ப்பரேட்டுக்களுக்கு சாதகமான சட்டங்கள் 
மேலும், உலகளாவிய தெற்கு நாடுகள் முழுவதும் உள்ள செம்பு, யுரேனியம், லித்தியம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் முதல் அனைத்தையும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் காலனித்துவ முறையில் சுரண்டி வலித்துக் கொழுத்து வருகின்றன.  

அரசின் மீது செலுத்தும் அழுத்தங்கள் மூலம் சட்டங்களை வளைத்து, மக்களைச் சுரண்டி, கார்ப்பரேட் வரிவிலக்குகளை அமல்படுத்தி தங்களை இந்நிறுவனங்கள் வளர்த்துக்கொள்கின்றன” என்று கூறியிருக்கும் ‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை, இறுதியாக, “அனைவ ருக்குமான பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அனைத்து நாடுக ளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, சுகாதாரம், கல்வி போன்ற முக்கிய சேவைத் துறை கள், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொதுத்துறைகளின் வளர்ச்சி யை குறிப்பிட்டுள்ளது. 

ஏகபோகம், சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும்!
தனியார் ஏகபோக நிறுவனங்க ளின் ஆதிக்கத்தை உடைப்பது, வணிகத்தை ஜனநாயக முறைப்படி நடத்துவது மற்றும் காப்பு ரிமை விதிகளை வைத்து ஏமாற்றும் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, தொழிலாளர்களின் அடிப்படை ஊதிய உரிமைகளை உறுதிப்படுத்த சட்டங்களை இயற்று வது மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் மீது சொத்து வரி விதித்து கார்ப்பரேட்டுகள் வரி செலுத்தாமல் சுதந்திரமாக சுரண்டு வதை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளது.

ஆட்சியதிகாரத்தில் கார்ப்பரேட் செல்வாக்கு
அலெண்டேவை மேற்கோள் காட்டிய ஆக்ஸ்பாம் அறிக்கை

அமெரிக்கா வால் படு கொலை செய் யப்பட்டவர், சிலி யின் முன்னாள் கம்யூனிஸ்ட் ஜனாதிபதி சால்வடார் அலெண்டே, “பன்னாட்டு நிறு வனங்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு நேரடி மோதலை நாங்கள் எதிர்கொள்கிறோம்” என்று கூறியிருந்தார். அவ்வரி களை அப்படியே தனது அறிக்கை யில் மேற்கோள் காட்டியிருக் கும் ‘ஆக்ஸ்பாம்’, “அரசின் அடிப்  படை அரசியல் முதல் பொருளா தாரம் மற்றும் இராணுவ முடிவு கள் வரை இந்த ஏகபோக பெரு நிறுவனங்கள் தலையிடுகின் றன” என்பது உண்மைதான் என்று  கூறியிருக்கிறது.

மக்களின் இழப்பிலும் 
ஆதாயம் ஈட்டும் கார்ப்பரேட்டுகள்

பணவீக்கம் மற்றும் போர்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையையும் நெருக்கடியையும் சந்தித்து வரும் வேளையில் கோடீஸ்வரர்களின் செல்வம் மட்டும் எப்படி பெருகிக்கொண்டே செல்கிறது? என்ற கேள்வியை முன்வைக்க பொருளாதார வல்லுநர்கள் இந்த சமத்துவமின்மை தற்செயலானது அல்ல என்றும் பில்லியன் டாலர் சொத்துக்கள் வைத்துள்ள பெரு முதலாளி வர்க்கம், பெருநிறுவனங்கள் மக்களின் இழப்பிலும்கூட தங்களுக்கு அதிகமான செல்வம் வந்து குவிவதை உறுதி செய்து கொள்கின்றனர் என்று ‘ஆக்ஸ்பாமின்’ இடைக்கால நிர்வாக இயக்குநர் அமிதாப் பெஹர் தெரிவித்துள்ளார்.