ரயில்வே துறையை தனியார்மய மாக்கும் வகையில், மோடி அரசு ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை வெகுவாக குறைத்துள்ளது. இத னால் பராமரிப்பு செலவுக் கூட நிதி இல்லா மல் ரயில்வே துறை திண்டாடி வருகிறது. நிதி ஒதுக்கீடு இல்லாததால் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமான அளவில் ரயில்கள் விபத்தில் சிக்கி கடுமையான பாதிப்பை விளைவித்து வருகின்றன. குறிப்பாக மோடி 3ஆவது முறையாக பிர தமர் இருக்கையில் அமர்ந்த பின் கடந்த 100 நாட்களில் 25க்கும் மேற்பட்ட ரயில் விபத்து சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், தானாக கவிழ்ந்து கொண்டு இருக்கும் ரயிலை கவிழ்க்க சதி வேறு நடக்கிறது என பாஜக ஆளும் மாநி லங்களில் அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக சம்பவங் கள் போன்று பாஜக ஆளும் உத்தரப்பிர தேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பாஜக கூட்டணி ஆளும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயிலை கவிழ்ப்பது செய்திகள் வெளியாகி வரு கின்றன. ஞாயிறன்று கூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பண்டா - மகோபா இடை யேயான ரயில் பாதையில் கான்கிரீட் தூண் மூலம் தடுப்புச்சுவர் அமைத்து தடை யை ஏற்படுத்திய 16 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். தண்ட வாளத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர் இருப் பதைக் கண்ட ரயிலின் லோகோ பைலட் அவசரகால பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க் கப்பட்டது.
மோடி அரசின் தவறான கொள்கை மற்றும் நிதி பற்றாக்குறையால் ரயில்கள் தானாக கவிழ்ந்து விபத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாஜக ஆளும் மாநிலங்களில் ரயிலை கவிழ்க்க தனியாக சதி செய்வதாக வெளியாகும் செய்திகள் நகைப்பை ஏற்படுத்தி வருகின்றன.