india

img

மேற்குவங்க அரசு சட்டம்-ஒழுங்கை காக்கத் தவறிவிட்டது

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் தலை நகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கே அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 8 அன்று இரவுப் பணியில் இருந்த முதுநிலை 2ஆம் ஆண்டு மருத் துவ மாணவி பலாத்காரம் செய்யப் பட்டு, கொடூரமாக கொலை செய்யப் பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள் ளாக்கிய இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ்  மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை யின் பொழுது தலைமை நீதிபதி அமர்வு,”பாலியல் வன்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மருத்துவ மாணவியின் பெயர், புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்க ளில் பரவியது எப்படி? இதுதொடர் பாக மேற்கு வங்க காவல்துறை நடவ டிக்கை ஏன் எடுக்கவில்லை? சம்பவம் நடந்தபோது பெற்றோர்கள் மருத்துவ மனையில் இல்லை. வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மருத்துவ மனை மற்றும் மாநில அரசிடம் உள்ளது. இப்படி இருக்கையில் சம்ப வம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மெத்தனமாக செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவ காரம் கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமே அல்ல; ஒட்டு மொத்த மருத்துவர்களின் பிரச்சனை ஆகும். மருத்துவ மாணவி கொலை வழக்கின் புலன் விசாரணை அறிக்கை யை ஆகஸ்ட் 22 அன்று சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தர விட்டுள்ளது.ax

ஆர்ஜிகே மருத்துவமனைக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு

ஆகஸ்ட் 15 அன்று ஆர்ஜிகே மருத் துவமனை தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,” மருத்துவ மனை தாக்கப்பட்ட நாளன்று போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டதும் போலீசார் அங்கிருந்து ஓடிவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் கூறி யுள்ளார். இதனால் ஆர்ஜிகே மருத்துவ மனைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். இந்த  வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 22க்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் காதலித்து வந்த இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அந்த இளைஞ ருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இளைஞர் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொல்கத்தா  உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா, உஜ்ஜால் பயூன் ஆகியோர் அடங்கிய வழங்கிய தீர்ப்பில்,”பாலியல் வன்கொடுமைக்குள் ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை காதலித்திருக்கிறார். ஆகையால் அந்த இளை ஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவும், அவருக்கு வழங்கிய தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.பெண்கள் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். பாலியல் உணர்வுகள் தூண்டுதலுக்குள்ளாகி கண்ணியத்தையும் சுயமரியாதை யையும் இழந்து தோற்றுவிடக் கூடாது” என தீர்ப்பு வழங்கியது. 

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,”இளைஞரை விடுதலை செய்த கொல் கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜால் பயூன் ஆகியோரின் கருத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.