india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மீண்டும் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. 

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது ஒன்றிய அரசின் அதிகார எல்லைக்குட் பட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

புதுதில்லி

ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம்
உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்த உச்சநீதிமன்றம்!

ஹரியானா மாநிலம் அம்பாலா மற்றும் தலைநகர் தில்லி இடையே ஷம்பு நகர் எல்லை யில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையுடன் 200 நாட்களைப் போராட்டம் எட்டியுள்ளது.

இதனிடையே, விவசாயிகளைத் தடுப்பதற்காக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுமாறு, ஹரியானா - பஞ்சாப் உயர் நீதிமன்றம் ஜூலை மாதம் உத்தர விட்டிருந்தது. ஆனால், இந்த உத்த ரவை எதிர்த்து, ஹரியானா பாஜக அரசு உச்சநீதிமன்றம் சென்றது.

இந்த வழக்கு திங்களன்று விசாரணை க்கு வந்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் போ ராட்டத்தை அமைதியான முறையில் மாற்று இடத்தில் நடத்த அனுமதி வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன, அவற்றைச் சுமூகமான முறையில் தீர்ப்பது எப்படி? என்பது குறித்து, ஆய்வு செய்ய பஞ்சாப் - ஹரியானா உயர் நீதி மன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு ஒரு வாரத்திற்குள் முதல் கூட்டத்தை கூட்டி ஆய்வுகளை தொடங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

புதுதில்லி

தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான் அமலாக்கத்துறையால் கைது

தில்லி ஆக்லா சட்டமன்ற தொகுதி யின் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமன துல்லா கான், தில்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோத மாக ஊழியர்களை நியமித்ததாக முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது. மேலும், வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாக தில்லி ஊழல் தடுப்புப் பிரிவு அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், இவ்விரு வழக்குக ளின் அடிப்படையில் பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை திங்களன்று அவரை கைது செய்தது.