ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,74,962 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 2023 ஆகஸ்டில் ரூ.1,59,069 கோடியாக இருந்த சரக்கு மற்றும் சேவை வரி வசூல், இந்த ஆகஸ்டில் 10% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், செப்டம்பர் 2 முதல் 4 வரை மீண்டும் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“மலையாள திரையுலகை உலுக்கி வரும் நீதிபதி ஹேமா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” என நடிகர் மம்முட்டி வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மோசடி மையங்களில் இருந்து மீட்கப் பட்டதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹரியானாவில் மாட்டிறைச்சியை உண்டதாக புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரை பசுக் குண்டர்கள் கொலை செய்த சம்பவத்தை அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி நியாப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில்,”இது ஆணவக் கொலை வழக்கு அல்ல. பசு பாதுகாப்பு சட்டத்தை ஹரியானா சட்டமன்றம் அமல்படுத்தி யுள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தில்லியில் தற்போதே தேர்தல் நடத்தினால் 70% வாக்குகளுடன் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி 70 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும்” என ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
இண்டிகோ விமான நிறுவனம் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் குரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் சையத் சலீம் கிலானி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முன்னிலையில் ஞாயிறன்று மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் குரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் சையத் சலீம் கிலானி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முன்னிலையில் ஞாயிறன்று மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தார்.