உயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு விதிக்கப்படுகிற வரியின் மூலம் ஒன்றிய பாஜக அரசு இதுவரை ரூ. 24 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. மக்கள் சிறுகச் சிறுக சேமித்து கட்டிய காப்பீட்டில் வரி பறிப்பு என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதனை “இந்தியா” கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. உயிர்க் காப்பீட்டில் ஜிஎஸ்டி-க்கு வரி விலக்கு வேண்டும்.