india

img

ராஜஸ்தான் அரண்மனைகள் சொல்லும் அவல வரலாறு...

“பாரத் ஜோடோ திரும்பும் வழியில் பார்த்தோம். கதைகளை கேட்க கேட்க ஆற்ற முடியாத கோபம் அடி வயிற்றில் இருந்து பீறிட்டது. அரண்மனையில் ராணிகளுக்கு மேலே ஜன்னல்கள். ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒரு ராணி. ஜலக் கிரிடை நடக்கும் குளங்கள். ராணியின் அறை. ராணிக்கான வேலை, நகையை மாட்டிக்கொண்டு வலம் வர வேண்டும்  எல்லாவற்றிலும் பெண்ணடிமைத்தனம். போர்களில் பிடிக்கப்பட்ட பெண்களின் கதைகள் தனி. ஒவ்வொரு மன்னராட்சியிலும் எழுதப்படாத, வாசிக்கப்படாத பெண்ணடிமை கதைகள் ஆயிரமாயிரம். ஜனநாயகத்தில் செங்கோலால் பெருமைப்பட பெண்களுக்கு ஏதுமில்லை.. அது அடிமைச்சின்னம், பெண்களின் அவமானச்சின்னம். பெண்களுக்கு எதிரானது மன்னராட்சி. மக்களாட்சியும், அரசியல் அமைப்புமே நமக்கு வெளிச்சம் தருகிறது.. அது நாடாளுமன்றத்தில் இருப்பது மன்னராட்சியை குறிப்பது.. பெண்களும் இந்நாட்டின் மன்னர்கள்.. செங்கோலை அகற்றுவதே சரி.. மிகச்சரியாக பேசிய தோழர் சு. வெங்கடேசன் எம்.பி. அவர்களுக்கு வாழ்த்துகள்..!” என்று சமூக செயற்பாட்டாளர் கிரித்திகா வெங்கடசுப்பிரமணியன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.