கடந்த மார்ச் மாதம் இந்தியா வின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர் தல் ஆணையர்களை, பிரதமர், மக் களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்ய வேண்டும் என நீதி பதி கே.எம்.ஜோசப் தலைமையி லான 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மேலும் நாடாளுமன் றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறை தொடரும் என்றும் ஒருமனதாக தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணை யர்களின் சுதந்திரத்தை உறுதி செய் யும் உச்சநீதிமன்றம் இந்த உத்த ரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணை யரைத் தேர்வு செய்யும் நடைமுறை யில் இருந்து தங்களுக்கு சாதக மாகவும், உச்சநீதிமன்றத்தினை விலக்கி வைக்கும் வகையிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒரு வர் தேர்வுக் குழுவில் இடம்பெறு வதற்கு ஏற்ப ஒன்றிய மோடி அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற் றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023 என்ற பெயரில் புதிய மசோதாவை உருவாக்கியது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப் பட்டு இருந்த நிலையில், மாநிலங்கள வையில் கடந்த டிசம்பர் 12 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் வியாழனன்று தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா 2023 விவாதத்திற்கு முன்வைக்கப் பட்டது. மக்களவையில் 100 எதிர்க் கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய் யப்பட்டுள்ளதால் விவாதமின்றி ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேவாலின் விளக்கத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா 2023 நிறைவேற்றப்பட்டுள்ளதால், விரைவில் குடியரசுத் தலை வருக்கு அனுப்பி சட்டமாக்கப்பட உள்ளது.
வழக்கு தொடர முடியாது
புதிய தேர்தல் ஆணையர் நிய மன மசோதாவின்படி, முன்னாள், தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, பிற தேர்தல் அதிகாரிகள் பணியில் இருக்கும்போது கூறிய வார்த்தைகள் மற்றும் நடந்து கொண்ட செயல்களுக்காக அவர் கள் மீது கிரிமினல் வழக்கோ, சிவில் வழக்கோ நீதிமன்றங்களில் தொடர முடியாது.