india

img

ரூ.777 கோடி சுவாஹா

தலைநகர் தில்லியில் போக்கு வரத்து நெரிசலை குறைக் கும் நடவடிக்கையாக கடந்த  2022-ஆம் ஆண்டு தில்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டி லைட் சிட்டிகளான நொய்டா, காசி யாபாத் ஆகியவற்றிற்கிடையே போக்குவரத்தை எளிமையாக்க தில்லி பிரகதி மைதானம் அருகே சுமார் 1.4 கி.மீ நீளம் கொண்ட இந்த  சுரங்க சாலை ரூ.777 கோடி செல வில் அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி 2022 ஜூன் மாதம் குப்பை அள்ளும் நிகழ்வுகளின் சிறப்பு ஷூட்டிங்கோடு திறந்து வைத்தார்.

ஒன்றரை வருடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை
இந்த பிரகதி மைதான சுரங்கச்  சாலை திறக்கப்பட்டு வெறும் 18  மாதங்களே (ஒன்றரை வருடம்) ஆகியுள்ள நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை யின்போது சுரங்கத்தில் நீர் புகுந்  ததால், பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை எனக் கூறி மூடப்பட்டது. மழைக்காலம் முடிந்த பின்பு மீண் டும் சுரங்கச் சாலை திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஒருவார கால மாக சுரங்க சுவர்களில் மழை பெய்  யாமலேயே நீர்க் கசிவு ஏற்பட்டது.  இதனால் சுரங்கச் சாலையில் தண்  ணீர் தேங்கியுள்ள நிலையில், பிர கதி மைதான சுரங்கச் சாலையில்  பயணிக்கவே மக்கள் அஞ்சுகின்ற னர். மேலும் சுரங்கம் மற்றும் சாலை யை பழுதுபார்ப்பது சாத்திய மில்லை என்றும், முழுமையாக சீர மைக்க வேண்டும் என தில்லி பொதுப்பணித்துறை தகவல் தெரி வித்துள்ளது.

மேலும் எல்&டி நிறுவனத்திற்கு தில்லி பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எல்லாம் பொய்...

சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்த பொழுது உலகத் தரத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களும் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருடத்தில் உழுத வயலை போன்று சுரங்கச் சுவர்கள் சின்னாபின்னமாகி, நீர்க் கசிவுடன் மோசமான நிலையில் உள்ளது. இதன்மூலம் பாஜகவின் பொய் மூட்டைகளில் பிரகதி மைதான சுரங்கமும் இடம் பெற்றுவிட்டது.