சொன்னது
“அனைவரையும் இணைத்துக் கொள்வோம்’ (சப்கா சாத்), ‘அனைவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம்’ (சப்கா விகாஸ்) என்ற முழக்கத்தோடு, அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை நாட்டில் உருவாக்கியுள்ளதாக மோடி அரசு கூறியது.”
“எஸ்சி உட்கூறு திட்டத்திற்கான ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில் 16.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறியது.
உண்மை நடப்பு என்ன?
உண்மை நடப்பு என்ன?
l உண்மையில், பழங்குடியினர் மற்றும் பெண்களுடன் சேர்ந்து தலித்துகளுக்கு எதிராக பாகுபாடு காட்டும் தனது மநுவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அட்டூழியங்கள்
l 2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (பி.ஓ.ஏ) கடுமையாக நீர்த்துப்போகச் செய்தது. இந்த தீர்ப்பை பாஜக கள்ள மவுனத்துடன் ஆதரித்தது.
l தலித் குழுக்கள் மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றி நாடு தழுவிய அளவில் ஒரு முழு அடைப்பினை ஏற்பாடு செய்தன. வட இந்தியாவின் பெரும்பகுதியில் இது மிகவும் வெற்றிகரமாக நடந்தது. உ.பி., ம.பி., ராஜஸ்தானில் பாஜக அரசுகள் பல இடங்களில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தின. 9க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் (தெரிந்த மற்றும் அடையாளம் காணப்பட்ட பாஜக ஊழியர்கள்
மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு உட்பட) அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மேலும் சிறார்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சித்ரவதை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
l உச்சநீதிமன்றம் செய்த மாற்றங்களை செல்லாததாக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு இந்த வலுவான போராட்டங்களால் நாடாளுமன்றம் வந்தது.
l பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 40,401. இந்த எண்ணிக்கை 2020இல் 58,000 க்கும் அதிகமாக உயர்ந்தது.
l தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கூற்றுப்படி, 2021க்கும் 2022க்கும் இடையில் எஸ்.சி.க்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள் ளன. 2018க்கும் 2022க்கும் இடையில், 49,613 வன்கொடுமை நிகழ்வுகள் மற்றும் தாக்குதல்களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
l பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தலித்துகளுக்கு எதிராக அட்டூழியம் செய்தவர் களுக்கு பாஜக தலைமையிலான மாநில அரசின் வெளிப்படையான பாதுகாப்பு வழங்கப்பட்ட பல கொடூர சம்பவங்களுக்கு சாட்சியாகஉள்ளது. உனா சம்பவம் (2016) மற்றும் ஹாத்ரஸ் சம்பவம் (2020) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
l தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஐ.நா. அறிக்கையின்படி, தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் 2015க்கும் 2019க்கும் இடையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளன.
l ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் சாதிப் பாகுபாடு, அவமானம் மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
l 2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (பி.ஓ.ஏ) கடுமையாக நீர்த்துப்போகச் செய்தது. இந்த தீர்ப்பை பாஜக கள்ள மவுனத்துடன் ஆதரித்தது. l தலித் குழுக்கள் மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றி நாடு தழுவிய அளவில் ஒரு முழு அடைப்பினை ஏற்பாடு செய்தன. வட இந்தியாவின் பெரும்பகுதியில் இது மிகவும் வெற்றிகரமாக நடந்தது. உ.பி., ம.பி., ராஜஸ்தானில் பாஜக அரசுகள் பல இடங்களில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தின. 9க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் (தெரிந்த மற்றும் அடையாளம் காணப்பட்ட பாஜக ஊழியர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு உட்பட) அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை – மேலும் சிறார்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சித்ரவதை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
l உச்சநீதிமன்றம் செய்த மாற்றங்களை செல்லாததாக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு இந்த வலுவான போராட்டங்களால் நாடாளுமன்றம் வந்தது.
l பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 40,401. இந்த எண்ணிக்கை 2020இல் 58,000 க்கும் அதிகமாக உயர்ந்தது.
l தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் கூற்றுப்படி, 2021க்கும் 2022க்கும் இடையில் எஸ்.சி.க்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள் ளன. 2018க்கும் 2022க்கும் இடையில், 49,613 வன்கொடுமை நிகழ்வுகள் மற்றும் தாக்குதல்களுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
l பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தலித்துகளுக்கு எதிராக அட்டூழியம் செய்தவர் களுக்கு பாஜக தலைமையிலான மாநில அரசின் வெளிப்படையான பாதுகாப்பு வழங்கப்பட்ட பல கொடூர சம்பவங்களுக்கு சாட்சியாக உள்ளது. உனா சம்பவம் (2016) மற்றும் ஹாத்ரஸ் சம்பவம் (2020) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
l தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஐ.நா. அறிக்கையின்படி, தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் 2015க்கும் 2019க்கும் இடையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளன.
l ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் சாதிப் பாகுபாடு, அவமானம் மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பொருளாதார நிலைமைகள்
l தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, தலித்துகளிடையே வறுமை விகிதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இது தேசிய சராசரியான 21 சதவீதத்தை விட அதிகமாகும். பலபரிமாண வறுமை நிலையில் உள்ள மக்களில் ஆறு பேரில் ஐந்து பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சாதிகளைச் சேர்ந்தவர்கள்.
l 2017-18ஆம் ஆண்டில், மோடி அரசு, பட்டியல் சாதி துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்தை கைவிட்டதன் மூலம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்தும்தலையீட்டிற்கான நெறிமுறையை மேலும் சீர்குலைத்தது. அதன் இரண்டாவது பதவிக்காலத்தில் (2019-20 முதல் 2023-24 வரை), எஸ்.சி.க்களுக்கான சராசரி ஒதுக்கீடு ஒன்றிய அரசு மற்றும் மத்திய அரசுத்துறைகளின் நிதியுதவி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 11.06 சதவீதம் மட்டுமே. அரசு வழிகாட்டுதல்களின்படியே, இது 15 சதவீதமாக இருந்திருக்க வேண்டும்.
இட ஒதுக்கீடுகள்
l மார்ச் 24, 2022 அன்று நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, ஒன்றிய அரசின் ஒன்பது அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் (ரயில்வே, நிதி, அணுசக்தி, பாதுகாப்பு, வீட்டுவசதி மற்றும் உள்துறை போன்றவை) 82,022 காலியிடங்கள் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் ஓபிசிக்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ளன. இவற்றில் 42 சதவீத பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
l 45 மத்திய பல்கலைக்கழகங்கள் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு காலிப் பணியிடங்களில் 42 சதவீதத்தை நிரப்பவில்லை. இந்திய அறிவியல் கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களில் 80 சதவீதம் நிலுவையில் உள்ளது.
கல்வி
l மெட்ரிகுலேஷன் கல்விக்குப் பிந்தைய காலத்திற்கான அம்பேத்கர் பெயரிலான கல்வி உதவித்தொகையில் சுமார் 80 பில்லியன் ரூபாயை உரிய நேரத்தில் விடுவிக்காததால், சுமார் 51 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
l பாஜக ஆளும் உ.பி., போன்ற மாநிலங்களில் தலித் மாணவர்களுக்கு அனைத்து கல்வி மட்டங்களிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
l 2014க்கும் 2021க்கும் இடையில் நிகழ்ந்த 122 மாணவர் தற்கொலைகளில், 68 எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களின் உயிர் பறிபோனது என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2018 முதல் 13,000 க்கும் மேற்பட்ட எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கைகளால் கழிவுகளை அகற்றுதல்
l கேரளம் மட்டுமே இந்த மனிதாபிமானமற்ற பழக்கத்திலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டு, அபாயகரமான துப்புரவு பணிகளுக்கு ரோபோக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிய ஒரே மாநிலமாகவும் உள்ளது.
தலித் உரிமைகளைப் பாதுகாப்போம்! பாஜகவை தோற்கடிப்போம்!