புதுதில்லி, ஜன. 25 - கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசன்ன பாலச் சந்திர வராலே, உச்சநீதிமன்ற நீதி பதியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வியா ழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வராலே-யின் இந்த பதவி யேற்பின் மூலம், உச்சநீதிமன்றம், இந்தியத் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளின் முழுப் பலத்தைப் பெற்றுள்ளது, அத்து டன், உச்சநீதிமன்றத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆகியுள்ளது. பி.ஆர். கவாய் மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மற்ற இரண்டு நீதிபதிகள் ஆவர். நீதிபதி எஸ்.கே. கவுல் கடந்த டிசம்பர் 25 அன்று ஓய்வுபெற்ற தைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் ஒரு பணியிடம் காலி யாக இருந்தது.
அந்த இடத்திற்கு வராலே-யின் பெயரை கொலீஜி யம் பரிந்துரைத்து இருந்தது. இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு வாரத்தில் நீதிபதி வராலே உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டார். “இந்திய அரசியலமைப்பின் 124-வது பிரிவின் பிரிவு (2) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங் களைப் பயன்படுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரசன்னா பாலச்சந்திர வராலே, இந்திய உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக நியமிப்ப தில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி யடைகிறார்” என சட்ட அமைச்ச கம் கூறியது.
நீதிபதி வராலே, 1962 ஜூன் 23 அன்று பிறந்தவர். 2008 ஜூலை 18 அன்று பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அக்டோபர் 15, 2022 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிய மிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.