india

img

சந்தேஷ்காளியில் திரிணாமுல் வன்முறை

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்டது சந்தேஷ்காளி கிராமம். இந்த கிராம த்தில்  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜ ஹான், அவரது நெருங்கிய உதவி யாளர் சிவபிரசாத் ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகிய 3 பேரை கைது செய்யக் கோரி கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அகிம்சை வழியில் பெண்கள் போராட்டம் நடத்தினர். 

குற்றவாளிகளை கைது செய்யா மல் போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் சிபிஐ(எம்) ஊழியர்கள் மீது போலீசாரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களும் வன்முறை யை கட்டவிழ்த்துவிட்டு, சிபிஐ(எம்) முன்னாள் எம்எல்ஏவும், விவசாயத் தொழிலாளர்களின் சங்கத்தின் மாநிலச்  செயலாளருமான நிரபதா சர்தார் உள்ளிட்ட சிபிஐ(எம்) ஊழியர்களை கைது செய்தது மம்தா அரசு. 

மேலும் சந்தேஷ்காளியில் மேற்கொண்டு போராட்டம் நடத்த முடியாதவாறு இணையதள சேவை துண்டிப்பு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த 144 தடை  உத்தரவை செவ்வாயன்று கொல்கத்தா  உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், சந்தேஷ்காளியில் கடந்த 2  நாட்களாக ஆய்வு மேற்கொண்ட தேசிய பட்டியலின மக்கள் நல ஆணை யம் (என்சிஎஸ்சி) ஆய்வறிக்கையை வெள்ளியன்று குடியரசுத் தலைவரி டம் சமர்ப்பித்தது.