india

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனே ரத்து செய்ய வேண்டும்

தொழிலாளர் நல சட்டங்க ளைத் தொழிலாளர் விரோத சட்டங்க ளாக்கிடும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் (Labour Codes) ரத்து செய்வது உட்பட எட்டு  அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி வரும் ஜூலை 10 அன்று நாட்டில் உள்ள அனைத்து வட்ட/ மாவட்டத் தலைநகர்களில் தர்ணா/ ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்று சிஐடியு அறைகூவல் விடுத்  துள்ளது.

சிஐடியு-வின் செயற்குழுக் கூட்  டம் ஜூன் 17-18 தேதிகளில் தில்லி யில் நடைபெற்றது. 18ஆவது மக்க ளவைத் தேர்தல் முடிவுக்குப்பின் நாட்டின் புதிய நிலைமைகளை ஆய்வு செய்தது. பாஜக 2014, 2019 தேர்தல்களில் பெற்றதைப்போல் பெரும்பான்மையை இப்போது  அதனால் பெற முடியவில்லை. அது, தெலுங்குதேசம் மற்றும் ஐக்  கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன்  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி  அமைக்கத் தள்ளப்பட்டிருக்கிறது.

பாஜக-வின் கடந்த பத்தாண்டு கால ஆட்சிக் காலத்தில் சிஐடியு  தொடர்ந்து நடத்திவந்த பிரச்சாரங் கள் மற்றும் போராட்டங்கள், பாஜக வின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு,  பணி நிபந்தனைகள், ஓய்வூதியம்  போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது தொழிலாளர் களை ஓரளவுக்கு வாழ வைத்திட உதவி இருக்கிறது என்றே சிஐடியு  செயற்குழு கருதுகிறது.

பாஜக அரசின் குணம் மாறவில்லை

இப்போது நடந்துமுடிந்துள்ள தேர்தலில் பாஜகவிற்கு பின்ன டைவு ஏற்பட்டுள்ளபோதிலும், அத னால் அது தான் பின்பற்றிவரும் பிற்போக்கு நவீன தாராளமயக் கொள்கைகளைக் கைவிட்டுவிடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.  தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை (Labour Codes) அமல்படுத்திட அறிவிக்கையை வெளியிட்டிருப்பதும், ஊழியர் பிரா விடண்ட் நிதியத்தில் முதலாளிகள் தொகை செலுத்தாவிட்டால் அவர் கள் கட்டவேண்டியிருந்த தண்டத் தொகையின் விகிதத்தைக் குறைத்  திருப்பதும்,பொதுத்துறை நிறு வனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க வகைசெய்யும் தேசியப் பணமாக்கும் திட்டத்தை (National Monetisation Pipeline)  மீண்டும் கொண்டுவர முடிவெடுத்தி ருப்பதும் இதன் குணம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

இவர்களின் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துய ரங்களிலிருந்து மக்களைக் காப் பாற்ற உடனடியாக பிரச்சார இயக்  கத்தை முடுக்கிவிட வேண்டும் என்று செயற்குழு ஒருமனதாகத் தீர்மானித்தது. 

இதன் முதல்கட்டமாக வரும்  ஜூலை 10 அன்று நாடு முழுவதும்  வட்ட/மாவட்டத் தலைநகர்களில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்  வைத்து தர்ணாக்கள்/ஆர்ப்பாட் டங்கள் நடத்திட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கோரிக்கைகள்

1.    தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) கிழித் தெறிக.

2.    தேசியப் பணமாக்கும் திட் டத்தைக் கிழித்தெறிக. தனியார்மயமாக்கும் அனைத்து வடிவங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்திடுக.

3.    அனைத்துத் தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்கிடுக.

4.    ஒப்பந்தத் தொழிலாளர்களுக் கும், ஒப்பந்ததாரர்கள் மாறிச் சென்றாலும் பணிப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடுக. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும்இதர பயன்பாடுகளை, ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிடுக. அக்னிவீர், ஆயுத்வீர், கொய் லாவீர் போன்ற குறிப்பிட்ட கால அளவிற்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் அனைத் தையும் கைவிடுக!

5.    ஊழியர் வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதி முதலானவற் றிற்கு, முதலாளிகள் தொகை செலுத்தாவிட்டால் கட்ட வேண்டிய அபராத விகிதத் தைக் குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருப்பதை ரத்து செய்க.

6.    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கிழித்தெறிக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருக. ஊழியர் பிராவிடண்ட் திட்ட ஓய்வூதியர் களுக்கு (EPS pensioners) குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9,000/- அல்லது அதற்கும் மேல் வழங்கிடுக. 

7.    அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், ’ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள் போன்ற திட்ட ஊழியர்கள் (Scheme workers) அனைவரையும் அங்கீகரித்து, நிரந்தர ஊழியர்களாக்கிடுக. அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உட்பட சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகளை அளித்திடுக.

8.    மாநிலக் குழுக்களால் அவசி
யம் எனக்கருதப்படும் எட்டாவது முக்கிய கோரிக்கையையும் இணைத்துக்கொள்ளவும்

கோரிக்கை தினம்

2024 ஜூலை 10 அன்று அகில  இந்திய அங்கன்வாடி தொழிலா ளர்கள்-ஊழியர்கள் சம்மேளனம் கடந்த காலங்களில் அனுசரித்த தைப்போலவே இந்த ஆண்டும் கோரிக்கைகள் தினமாக அனுச ரித்திடும்.

மேற்படி தர்ணா/ஆர்ப்பாட்ட அறைகூவலை மாபெரும் வகை யில் வெற்றியாக்கிட வேண்டும் என்று உழைக்கும் மக்களை சிஐ டியு அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு சிஐடியுவின் செயற் குழு கூறியுள்ளது.  

    (ந.நி.)