india

img

முடிவுக்கு வந்தது “கொல்கத்தா டிராம் ரயில்” சேவை

கொல்கத்தா (மேற்கு வங்க  தலைநகர்) என்றாலே நினைவுக்கு வருவது டிராம் (ரயில் சேவை) சேவையாகும். கொல்கத்தா செல்பவர்கள் அனைவ ருமே டிராம் ரயிலில் பயணம் செய்ய திரும்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு புகழ்பெற்றதாக இருக்கும் இந்த டிராம்  ரயில் சேவை 1873ஆம் ஆண்டு பிப்ரவரி 24  அன்று  ஆங்கிலேயரால் அறிமுகம் செய்  யப்பட்டது. கொல்கத்தா மட்டுமில்லா மல் சென்னை (தமிழ்நாடு), பாட்னா  (பீகார்), மும்பை, நாசிக் (மகாராஷ்டிரா)  போன்ற நகரங்களிலும் டிராம் சேவை யை ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த னர். ஆனால் பின்னாளில் இங்கெல்லாம்  டிராம் சேவை படிப்படியாக குறைந்து விட்டன. தற்போது கொல்கத்தா தவிர எங்கேயும் பயன்பாட்டில் இல்லை என்ற  நிலையில், 150 ஆண்டுகளாக இயங்கி வரும் டிராம் சேவையை நிறுத்த மேற்கு  வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

குறைந்த வேகத்தில் டிராம்கள் இயங்குவதாலும், மக்கள் அதிவேக பயணத்தை விரும்புவதாலும் அதன் சேவையை நிறுத்த இருப்பதாக மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச் சர் திலீப் மோண்டல் தெரிவித்துள்ளார்.

“கொல்கத்தாவின் பாரம்பரிய அடை யாளமாக இருக்கும் டிராம் ரயில் சேவை களை நிறுத்தக்கூடாது. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறுவது  ஏற்கத்தக்கதல்ல’ என சமூகவலைத்தளங் களில் மேற்குவங்க மக்கள் கொந்தளிப்பு டன் கருத்துக்களுடன் கண்டனம் தெரி வித்து வருகின்றனர்.