பெங்களூரு
முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என அழைத்த விவகாரம்
பகிரங்க மன்னிப்புக் கோரிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பெண் வழக்க றிஞரிடம்,”கோரிபால்யாவில் இருந்து மார்க்கெட் வரை உள்ள மைசூரு மேம் பாலம் பாகிஸ்தானில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை என்பதால் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், உத்தரவு பிறப்பிக்கவும் பொருந்தாது” என அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புற நகர் பகுதியான கோரிபால்யா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்ற நிலையில், அந்த பகுதியை “பாகிஸ்தான்” பகுதி என நீதிபதி ஸ்ரீஷா னந்தா கூறியது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையி லான 5 நீதிபதிகள் அமர்வு கண்டனம் தெரி வித்து,”கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவா ளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்நிலையில், சனியன்று மதியம் நீதி மன்ற நடவடிக்கைகள் தொடங்கும் நீதி பதி ஸ்ரீஷானந்தா,”நீதித்துறையின் நட வடிக்கையின் போது சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கு மாறாக செய்தியாக்கப்பட்டி ருக்கிறது. அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத் தில் தெரிவிக்கப்பட்டது இல்லை. அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமூகத்தின் எந்த வொரு பிரிவினரையோ காயப்படுத்தி யிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
மும்பை
12 தொகுதிகள் வேண்டும்
பாஜக கூட்டணிக்குள் மோதலை தொடங்கிய அத்வாலே
288 தொகுதிகளை கொண்ட மகா ராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற தேர்தல் வேலையில் மும்முர மாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் அங் கம் வகிக்கும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (சரத்) - சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய “மகா விகாஸ் அங்காடி (எம்விஏ)” கூட்டணியும், பாஜக - தேசியவாத காங்கிரஸ் (அஜித்), சிவ சேனா (ஷிண்டே), குடியரசு கட்சி (அத் வாலே), நவநிர்மாண் சேனா (பால் தாக் கரே மருமகன்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மஹாயுதி கூட்டணியும் சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.
எம்விஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சீராக நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சி களும் இணைய வாய்ப்புள்ளது என தக வல் வெளியாகியுள்ளன.
ஆனால் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணியில் அடிதடிக்கு இணை யாக மோதல் போக்குடன் தொகுதி பங் கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பாஜக - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - சிவசேனா (ஷிண்டே) ஆகிய கட்சி கள் தொகுதி பங்கீடு தொடர்பாக கடும் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், குடியரசு கட்சியும் (அத் வாலே) தங்களுக்கு 12 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என கோரிக்கை விடுத்து, கூட்டணிக்குள் அடுத்தகட்ட மோதலை தொடங்கி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலை வரும், ஒன்றிய அமைச்சருமான ராம தாஸ் அத்வாலே கூறுகையில்,”குடியரசு கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும். வடக்கு நாக்பூர், உம்ரெட் (நாக்பூர்), உமர்கெட், வாஷிம் மற்றும் விதர்பா வில் நான்கு தொகுதிகள் என 12 தொகு திகள் கண்டிப்பாக வேண்டும் என கேட்டுள்ளோம்” என அவர் கூறியுள்ளார். நாக்பூர் மண்டலத்தில் உள்ள தொகுதி களுக்காக தான் பாஜக கூட்டணிக்குள் மோதல் இருந்து வரும் நிலையில், குடியரசு கட்சி கேட்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை நாக்பூர் மண்ட லத்திலேயே இருப்பதால் என்ன செய்வது என தெரியமால் பாஜக விழிபிதுங்கி உள்ளது.
குஜராத்திற்கு சென்று சோதனை செய்தது ஏன்?
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தலைசிறந்த உணவு தர பரி சோதனை நிறுவனங்கள் உள்ளன. ஆனால் திருப்பதி நெய் மட்டும் ஏன் குஜராத்திற்கு சென்று பரிசோதனை செய்யப்பட்டது? அங்கு சென்று பரிசோதனை செய்ய சொன்னது யார்? பரிசோதனை செய்தது திருப்பதி தேவஸ்தானமா? இல்லை ஆந்திர அரசா? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள்ளன. ஆனால் குஜராத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் அனைத்தும் போலி யானது என ஒரு தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நிறுவனத்தில் மட்டும் சோதனை ஏன்?
முற்காலத்தில் திருப்பதி லட்டுவிற்கு கர்நாடக பால் உற்பத்தி நிறுவனமான நந்தினி நெய் வழங்கி வந்தது. ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஆட்சி யில் அமர்ந்தவுடன் டெண்டர் விடப்பட்டது. தமிழ்நாட்டின் ஏ.ஆர்.டெய்ரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் குறைந்த விலைக்கு டெண்டர் மூலம் நெய் பெறப்பட்டு லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கலப்பட நெய் பிரச்சனை காரணமாக தமிழ்நாட்டின் பால் நிறுவனத்தில் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நிறுவ னங்களின் பெயர்களை கூட ஒன்றிய அரசு வெளியிடா தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.