அரபிக்கடல் பகுதியில் சோமாலியா கடற்கரை அருகே மேற்கு ஆப்பி ரிக்கா நாடான லைபீரியா கொடி யுடன் சென்று கொண்டு இருந்த “எம்வி லிலிலா நோர்போக்” (MV LILA NORFOLK) என்ற சரக்குக் கப் பலை 6 பேர் கொண்ட கடற்கொள் ளையர்கள் கடத்தினர். கப்பலில் இருந்த 15 இந்தி யர்கள் உள்பட 21 பணியாளர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், “எம்வி லிலிலா நோர்போக்” கப் பலை மீட்க சென்னை ஐஎன்எஸ் போர்க்கப்பலை இந்திய கடற்படை அனுப்பியது.
வெள்ளியன்று இரவு சம்பவ இடத்திற்கு சென்னை ஐஎன்எஸ் போர்க்கப்பல் சென்ற பொழுது கடற்கொள்ளையர்கள் “எம்வி லிலிலா நோர்போக்” கப் பலை விட்டு தப்பியோடிய நிலை யில், இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேரையும் இந்திய கடற் படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ள நிலையில், கடத்தல் கப்ப லில் இருந்து மீட்கப்பட்ட இந்தி யர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என கோஷமிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரு கிறது.
அரசியல் ஆதாயம்? சர்வதேச கடல் எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த மாலுமிகள், மீனவர்கள் கப்பலோடு கடத்தப் பட்ட சம்பவங்கள் பல அரங்கேறி யுள்ளன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாலுமிகள், மீனவர்களை கடற்படை வீரர்கள் போராடி மீட்ட வரலாறுகளும் உள்ளன. மீட்கப் பட்டவர்கள் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் “இந்திய அரசுக்கு நன்றி”, “கடற்படைக்கு நன்றி” என மருத்துவ சிகிச்சையுடன் வீடு திரும்புவார்கள். ஆனால் முதன் முறையாக “எம்வி லிலிலா நோர் போக்” கப்பலில் மீட்பு சம்பவத்தின் பொழுது இந்திய மாலுமிகள் “பாரத் மாதா கி ஜெய்” எனக் கூறி இருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஒன் றிய மோடி அரசின் அனைத்து செயல்பாடுகளும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான ஆதாய பொருளாகவே உள்ளது.
ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா கூட மோடி அரசு மக்க ளவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கான முன்னோட்டமாகவே உள்ள நிலை யில், தற்பொழுது கடத்தல் சம்ப வத்தில் இருந்து மீட்கப்பட்ட மாலுமி களை கூட “பாரத் மாதா கி ஜெய்” என கோஷமிட வைத்ததும் மக்க ளவை தேர்தலுக்கான அரசியல் ஆதாயமாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.