இந்தியாவில் உற்பத்தித் துறை, அடிப்படை கட்டமைப்புத் துறை உள்பட நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர் 2023) கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. புதிய முதலீடுகள் 46 சதவீதம் வீழ்ந்துள்ளன. ஏற்கெனவே நடந்து வரும் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் முழுவதையும் அரசு உரிய முறையில் விடுவிக்கவில்லை.
நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்துள்ளார். ஆனால் அவை அனைத்தும் தேர்தல் கால மோசடி வேலையே என்பது தற்போது தெரிய வருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் மிகவும் ஆடம்பரத்துடன், படாடோபமான விழாக்களுடன் துவக்கி வைத்தார். ஆனால் பெருவாரியான திட்டங்கள் முழுமை பெறவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரிய வருகிறது.