india

img

ரோஹித் வெமுலா வழக்கு மீண்டும் விசாரணை தெலுங்கானா டிஜிபி உத்தரவு

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா மர ணம் தொடர்பான வழக்கை முடித்து வைத்த தெலுங்கானா காவல்துறையின் நடவடிக்கை க்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் பலனைத் தந்துள்ளது. ரோஹித் வெமுலா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த தெலுங்கானா மாநில டிஜிபி ரவி குப்தா உத்தரவிட்டுள்ளார்.

ரோஹித் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், தனது உண்மையான சாதியை வெளிப்படுத்திவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறும் காவல்துறையின் அறிக்கை யை டிஜிபியின் உத்தரவு நிராகரித்தது. இந்த வழக்கில் இறுதி அறிக்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும், இந்த வழக் கில் நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோர உள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

வன்கொடுமை வழக்குப் பதிவு
ஜனவரி 2016 இல், ஆராய்ச்சி மாணவர் ரோஹித், பல்கலைக் கழக வளாகத்தில் இறந்து கிடந்தார். முன்னாள் வேந்தர் அப்பா ராவ், அப்போதைய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ஏபிவிபி தலைவர்கள் மீது பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமைச் சட்டம்  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ரோஹித்தின் தற்கொலைக் குறிப்பு மற்றும் பிற கட்டுரைகளில் அவர் சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்டார் என்பது தெளி வாகத் தெரிந்தது. இருப்பினும், ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு சாதிப் பாகுபாடு காரணமல்ல என்று பி.ஆர்.எஸ். ஆட்சியின் காவல்துறை அறிக்கை கூறியுள்ளது. ரோஹித் படிப்பை விட மாணவர் அரசிய லில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்றும் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பா ராவ் உள்ளிட்ட அனைவ ருக்கும் காவல்துறை குற்றமற்றவர்கள் என சான்று வழங்கியது. உண்மைக்கு மாறான இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்நிலையில், காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்து 4 மாதங்கள் ஆன நிலையில்,  வெமுலா வழக்கு தொடர்பான காவல்துறை யின் இறுதி அறிக்கைக்கு எதிராக பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்த முடிவை ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மறுபரிசீலனை செய்தது. இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ரோஹித் வெமுலாவின் தாய் மற்றும் சகோதரர் வெள்ளியன்று சந்தித் தனர். இதையடுத்தே வெமுலா வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.