நாம் தொடங்கிய பிரச்சாரம் இன்னும் அதன் இலக்கை எட்டவில்லை. மக்கள் தங்களது தீர்ப்பை “இந்தியா” கூட்டணிக்கான வெற்றியாக வழங்கி விட்டனர். அந்த தீர்ப்பை, எந்த தலையீடும் இன்றி வெளிக்கொண்டு வருவது “இந்தியா” கூட்டணி கட்சி ஊழியர்களின் பணி. வாக்கு எண்ணிக்கையை கவனமாக கண்காணிக்க வேண்டும். பொய்களுக்கு எதிரான இந்தப் போரை வெற்றியடையச் செய்ய வேண்டும். நிச்சயம் “இந்தியா” கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெறப் போகிறது.