புதுதில்லி, டிச.6-
மாநில அரசின் வரம்புக்குள் வரும் பிரச்சனைகளை கையாள்வ தை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரும் மற்றொரு முயற்சியே கொதிகலன்கள் சட்ட முன் வடிவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் கொதிகலன்கள் சட்டமுன்வடிவு மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:
கொதிகலன்கள் சட்டமுன்வடி வில் புதிய சாராம்சம் எதுவும் இல்லை. இந்தச்சட்டமுன்வடிவின் நோக்கங்களை ஆராய்ந்தோ மானால், இந்திய அரசு அரசமைப்பு ச்சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு முன்பிருந்த சட்டங் களை மாற்றியமைக்க நடவடிக்கை கள் எடுத்துவருவது தெளிவாகும். புதிதாக கிரிமினல் சட்டங்கள் மூன் றைக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து நாட்டின் சட்டங்களை மாற்றியமைக்கும் விதத்தில் இந்தச் சட்டமுன்வடிவும் இந்தி பெயரில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் வழிகாட்டலை பின்பற்ற நிர்ப்பந்தம்
இந்தச் சட்டமுன்வடிவில் புதிய சாராம்சம் எதுவும் இல்லை. முத லாவதாக, இது புதிய கலயத்தில் பழைய கள்ளாகும். (This is an old wine in a new bottle.) இதில் உள்ள சட்டப்பிரிவுகள் பழைய சட்டத்தில் உள்ளன. புதிதாக உள்ளது என்னவெனில் மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களை பறித்திருப்பது மட்டுமேயாகும். குறிப்பாக சட்டப்பிரிவு 23(4) என்ன கூறுகிறது என்றால், கொதிகலன் கள் மூலம் ஏற்படும் விபத்துகளைப் புலனாய்வு செய்யும்போது ஒன்றிய அரசாங்கத்தின் வழிகாட்டல்களை மாநில அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டும் என்கிறது. நம் அரசமை ப்புச்சட்டத்தின்கீழ் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மாநிலஅரசாங்கங் களின் அதிகார வரம்பெல்லைக் குள் வரக்கூடியதாகும். அதே போன்றே குற்றங்கள் குறித்துப் புல னாய்வு செய்வதும் மாநில அரசாங்கங்களின் அதிகார வரம் பெல்லைக்குள் வரக்கூடியவை களேயாகும்.
கூட்டாட்சித் தத்துவத்தின் மீது தாக்குதல்
ஆயினும் இந்த அதிகாரங் களின் மீது தாக்குதலைத் தொடுக்கும் விதத்தில் இந்தச் சட்ட முன்வடிவு இங்கே கொண்டுவரப் பட்டிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவு கள் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைகள் மீது தாக்குதல் களைத் தொடுத்திருக்கிறது. மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களை எப்படி நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்? (குறுக்கீடு) இது முற்றி லும் மாநில அரசாங்கத்தின் உரிமை யாகக் கருதப்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்குள் வரக்கூடிய தாகும்.
மாநிலங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம்
அடுத்து, 25ஆவது பிரிவு மேலும் மோசமான விதத்தில் அமைந்திருக்கிறது. மாநில தலைமை ஆய்வாளர் எடுத்திடும் முடிவுகள் மீது மேல்முறையீடு செய்தால் அதனை ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரிகள் விசா ரித்து தீர்ப்பு வழங்குவார்களாம். ஒரு மாநிலத்தில் செயல்படும் கொதிகலன் தொடர்பாக பிரச்சனை வந்தால் அதனைத் தீர்த்திட மேல்முறையீட்டுக்காக தில்லிக்கு விண்ணப்பித்திட வேண்டும். மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் இதனைத் தீர்த்து வைக்கக்கூடிய வல்லமையற்ற வர்களா? இதுபோன்ற சிறிய பிரச்ச னைகளைக் கூட அவர்கள் கையாள் வதற்கு வல்லமையற்றவர்களா? இது அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்கான தில்லியின் மற்றுமொரு முயற்சியேயாகும். மாநில அரசாங்கங்கள் தற் போது பெற்றிருக்கும் ஒருசில குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட ஒன்றிய அரசு தட்டிப்பறித்திடும் செயலேயாகும். இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் பேசினார். (ந.நி.)