india

img

எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல் நாடாளுமன்றத்தில் இனி வலுவாக ஒலிக்கும்

புதுதில்லி, ஜூன் 5 - 18வது மக்களவைத் தேர்தல்  முடிவுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை; இந்தியாவின் ஜனநாய கத்தைப் பாதுகாக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க- மக்களின் ஜனநாயக மற்றும் குடி மை உரிமைகளைப் பாதுகாக்க இந்த  முடிவுகள் மிகப்பெரிய முன்னேற்ற மாக அமைந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

“இதனைச் சாதிக்க வாக்களித்த  இந்திய மக்கள் வாழ்த்துக்குரியவர் கள்” என்றும் யெச்சூரி பாராட்டு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இந்திய மக்கள் அசாதாரண சாதனை

பதினெட்டாவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக ஒன்று தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மக்கள் மிக அசாதாரணமான முறையில் சாதித் துள்ளனர். அத்தகைய முடிவுகளைத் தந்துள்ளனர். பாஜக தோல்வி அடை யும் வகையில், அதாவது பாஜக தனிப் பட்ட முறையில் பெரும்பான்மைக்கு கணிசமாக குறைவான தொகுதிகள் பெறுவதை உத்தரவாதம் செய்யும்  வகையில் தீர்ப்பு அளித்துள்ளனர்.

பாஜக தனித்து ஆட்சி  அமைக்க முடியாது

2014 மற்றும் 2019-இல் பாஜக தனி யாக பெரும்பான்மை பெற்றது. ஆனால் இந்த முறை பெரும்பான்மைக்கு கணிச மாக குறைவான இடங்கள் பாஜக வுக்கு கிடைத்துள்ளன. 

இதன் பொருள் என்ன? பாஜக தனியாக ஆட்சி அமைக்க முடியாது. என்டிஏ கூட்டணி ஆட்சிதான் அமைக்க இயலும்; கூட்டணி ஆட்சிக்கு சாத்திய கூறு இருக்குமானால்! 

மேலும், அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தாலும் பாஜக தனது பல்வேறு கூட்டாளிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உருவாகும். 

10 ஆண்டு கால மூர்க்கத்தனமான ஆட்சி

கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கட்சி  மூர்க்கத்தனமாக தனது மேலாதிக்கத் தை திணிப்பதும், எதேச்சதிகாரச் செயல்களை அரங்கேற்றுவதுமாக இருந்தது! 

கடந்த 10 ஆண்டுகளில்

n    சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட கொடூரங்கள்
n    இந்திய அரசியல் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள்
n    அதன் மதச்சார்பற்ற ஜனநாயக பண்புகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் 
 

இனி வலுவான குரலெழுப்ப முடியும்

- இத்தகைய பிரச்சனைகளில் இப்பொழுது மக்களின் எதிர்ப்புக்  குரல் கொடுக்கவும் எதிர்வினை யாற்றவும் அதிகமான வாய்ப்புகள் உரு வாகியுள்ளன. ஜனநாயக உரிமை களையும் குடிமை உரிமைகளையும் காலில் போட்டு நசுக்கும் மோசமான செயல்களை தடுத்து நிறுத்துவதை உத்தரவாதம் செய்வதற்கான கூடுதல் சூழல்களும் உருவாகியுள்ளன. குறைந்தபட்சம் பழைய மூர்க்கத் தனத்தின் வீச்சை குறைக்க முடியும்!

இந்தியா கூட்டணிக் கட்சிகள் 234 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இத்தகைய வலுவான எண்ணிக்கை யில் எதிர்க்கட்சிகள் இருக்கும் பொழுது, கடந்த காலத்தில் மோடி அரசு வெளிப்படுத்திய மூர்க்கத்தனம் போல இப்பொழுதும் திணிக்க முற்பட் டால் அதற்கு எதிராக மிக அதிகமான எதிர்ப்பை வெளிப்படுத்தும் நாடாளு மன்றமாக இது அமையும். இந்த தேர்தல் முடிவின் மிக முக்கிய அம்சம் இது!

கருத்துக் கணிப்பு பின்னணி யில் பங்குச் சந்தை சூதாட்டம்

இன்னொரு முக்கிய அம்சம்  என்னவெனில் ‘எக்ஸிட் போல்’  (Exit Poll) எனப்படும் ‘வாக்களித்து விட்டு வெளியே வருபவர்களிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பின்’ நோக்கம் முழுமையாக அம்பலமாகி யுள்ளது. அதன் பிம்பம் நொறுக்கப் பட்டுள்ளது.  தேர்தலுக்குப் பிந்தைய இத்தகைய கருத்துக் கணிப்புகள் முக்கியமாக பங்குச் சந்தையில் பணம் ஈட்ட நடத்தப்படும் சூதாட்டத்துக்கு காரணியாக வடிவமைக்கப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது. 

‘எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்பு கள் வெளிவந்தவுடன் பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றது. பணம் பார்க்க வேண்டியவர்கள் நிறைய ஈட்டினர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்த  பின்னர் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. 

தேர்தல் முடிவுகள்  மிகப்பெரிய முன்னேற்றம்

இந்த அம்சம் உட்பட, அனைத்து தரவுகளும்  வந்த பின்னர் விரிவான பரிசீலனை செய்யப்படும். 

எனினும்  இந்த தொடக்கத் தருணத்தில் சொல்ல வேண்டியது என்னவெனில், இந்த முடிவுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாது காக்க, அரசியலமைப்புச் சட்டத்தின்  மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங் களைப் பாதுகாக்க- மக்களின் ஜன நாயக மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க இந்த முடிவுகள் மிகப் பெரிய முன்னேற்றத்தை தந்துள்ளன. இதனை சாதிக்க வாக்களித்த இந்திய மக்கள் வாழ்த்துக்குரியவர்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வெளியிட்டுள்ள அர சியல் தலைமைக்குழு அறிக்கையில், “வெல்லவே முடியாத சக்தி வாய்ந்தவர் நரேந்திர மோடி என்று எழுப்பப் பட்டிருந்த பிம்பம் முற்றாக தகர்க்கப் பட்டிருக்கிறது. தேசத்தின் மக்கள் மோடி அரசின் எதேச்சதிகார தாக்குதல் களுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் குடிமை உரிமைகளுக்கு ஆதரவாகவும், வலு வாக எழுந்து நின்றுள்ளனர். இந்தியா  கூட்டணி தனது வலுவான போராட்டத் தை நடத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையான முறை யில் நடந்து கொண்டிருந்தால் தேர்தல்  முடிவுகள் பாஜகவுக்கும், அதன் கூட்ட ணிக்கும் இன்னும் பாதகமாகவே அமைந் திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.  

இத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சி களும் தங்களது பலத்தை சற்று அதி கரித்துள்ளன. முழுமையான முடிவு கள் வந்தபிறகு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துள்ளது.