india

11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்த விவகாரம்:

புதுதில்லி, ஜன. 7- பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு  விடுவித்த விவகாரத்தில் உச்சநீதி மன்றம் திங்களன்று (ஜன. 8) தீர்ப்பு வழங்க உள்ளது. 2002 குஜராத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரங்கேற்றிய இனப்படு கொலையின் போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கும்பலால் பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டார்.

மூன்று வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்ற வாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது. குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலை யை ரத்து செய்யக்கோரி பலர் பொது நல வழக்குகளும் தாக்கல்செய்தனர். இதுகுறித்து குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “11 குற்றவாளிகளின் நடத்தை நன்றாக இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவித்ததாகவும்” தெரி வித்துள்ளது.

குற்றவாளிகளின் விடு தலையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பல்வேறு மனுக்களின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் பில்கிஸ் பானு மீதான கும்பல் பாலியல் வன்கொ டுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடு வித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது.