india

img

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்.சி பிரிவினருக்கான 18% இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது, பஞ்சாப், அரியானா மாநிலங்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பான 20 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி பேலா திரிவேதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.