india

img

நிலக்கரி சுரங்க வழக்கு : மேகாலயா அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத் தொகையை அம்மாநில அரசு செலுத்த செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேகாலயா மாநிலத்தில் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அசாம் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.கஹோட்டி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து நிலக்கரி சுரங்கங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இந்த குழுவினர் மேகாலயா மாநிலத்தில் மட்டும் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக 2,400 நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான சுரங்கங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் தேதி, சட்டவிரோதமாகச் செயல்படும் நிலக்கரி சுரங்கங்களை தடை செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத மேகாலய அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்  இரு மாதங்களில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 

;