india

img

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: ஜனவரி 2 ஆம் தேதி தீர்ப்பு!

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளுக்கு, வரும் ஜனவரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மோடி அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. புழக்கத்திலிருந்த 86% நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இதை அடுத்து, ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 35க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்தன. உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்திருந்த நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு வரும் ஜனவரி 2-ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி அப்துல் நசீர் வரும் ஜனவரி .3-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.