india

img

எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழக்கு - விரைந்து தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால் தற்போது தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை என்பதை ஆயுள் கால தடையாக மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட்  நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்குகளை விரைவாகவும் திறம்படவும் தீர்ப்பதற்குத் தேவையான உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.