india

img

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெற தடை - உச்சநீதிமன்றம்

மணிப்பூரில் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ கடந்த ஜூலை 19-ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில், மணிப்பூரில் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.