india

img

விக்டோரியா கவுரிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க  கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையில், வழக்கறிஞரான விக்டோரியா கவுரியும் ஒருவர். இவரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் பாஜக நிர்வாகியாக இருந்தவர். மேலும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தவர்.
இதன் காரணமாக இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
 

;