india

img

சுகேஷ் சந்திரசேகரின் ஆடம்பர சிறை வாழ்க்கை

சிறையில் ஆடம்பர வாழ்கை வாழும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்
   மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் சிறை அறையிலிருந்து ரூ. 80,000  மதிப்புள்ள ஜீன்ஸ் விலையுயர்ந்த ஷூக்கள் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி வி தினகரன் மூலம்  தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 2017-ல் சுகேஷ் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது டெல்லி திகார் சிறையில் இருந்த போதே பிரபல மருந்து நிறுவன அதிபர் குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி உட்பட பல பாலிவுட் பிரபலங்களிடம் ரூ.200 கோடி பணமோசடி செய்த வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.