india

img

இந்தாண்டு மே 30 அன்று கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை

இந்தாண்டு மே 30 அன்று கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2 அன்று நாடு முழுவதும் பரவியது. கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் கனமழையை அளித்த தென்மேற்கு பருவமழை ராஜஸ்தானில் இருந்து விடைபெற்றது. செப்.,17க்கு பதில் 7 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி லட்டுக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

“திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர் கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா?” என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதி லட்டுவில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரி ழந்துள்ளனர்.