india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஜம்மு-காஷ்மீரில் ரஜௌரி மாவட்டத்தில் வியாழ னன்று இரவு பயங்கரவாதிகளை ஊடுருவ விடாமல் தடுக்கும்  பொருட்டு ராணுவத்தினர் பாது காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுரான் கோர்ட் பகுதியிலிருந்து தானமண்டி பகுதியை நோக்கி ராணுவத்தினர் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது ராணுவ வீரர்கள் பலியாகினர். 

இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் வீரேந்திரசிங், கரண்குமார், சந்தன்குமார், கௌதம்குமார் ஆகிய நான்கு வீரர்கள் பயங்கர வாதிகளுக்கு எதிரான இந்த மோதலில் தங்களது இன்னுயிரை இழந்து தியாகிகள் ஆகியுள்ளனர். நான்கு வீரர்களும் துணிச்சலுக்கும் மகத்தான தியாகத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர் களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இதயப் பூர்வமான ஆறுதல்களை தெரிவிக்கிறேன்.