india

img

சிங்கரேணி அரசு நிலக்கரி நிறுவனத்தை அதானிக்கு தாரைவார்க்க மோடி அரசு திட்டம்

மோடி பிரதமர் ஆன பின்பு தனது  நண்பர் அதானி பலன் பெறும்  வகையில் துறைமுகம், நிலக்  கரிச் சுரங்கம் உள்ளிட்டவைகளை நேரடி மற்றும் மறைமுகமான ஏலத்தின் மூலம் அடி மாட்டு விலைக்கு தாரை வார்த்து வருகிறது  மோடி அரசு. “கோல் இந்தியா” என்ற நிலக்கரி  சார்ந்த பொதுத்துறை அரசு நிறுவனங்கள் இருந்தும், மோடியின் மூலமாக அதானியே  நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தையும் வாரிச்  சுருட்டி நன்றாக கல்லா கட்டி வருகிறார். இத னைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி னாலும் மோடி அரசு அதானிக்கு ஆதரவா கவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத் தில் உள்ள கோயகுடம், சத்துப்பள்ளி சுரங் கங்களின் ஏலத்தை தவிர்த்து, ஒன்றிய மற்  றும் மாநில அரசின் (தெலுங்கானா) கூட்டு  அரசு நிலக்கரி நிறுவனமான சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL -  Singareni Collieries Company Limited) வசம் ஒப்படைக்க ஒன்றிய அரசுக்கு அழுத்  தம் கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலக் குழு  ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாநி லத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட் டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலா ளர் தம்மினேனி வீரபத்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விலை மதிப்பற்ற கனிமங்களை தனியார் நிறுவ னங்களுக்கு ஒப்படைப்பதிலேயே குறியாக  உள்ளது. இது வழக்கமான நிகழ்வாக உள்ள  நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் கோயகுடம், சத்துப்பள்ளி சுரங்கங்களை யும் ஏலம் விட மோடி அரசு தயாராகி வரு கிறது. இந்த 2 நிலக்கரி சுரங்கங்களை ஏலம்  விடுவதன் மூலம் சிங்கரேணி கொலீரீஸ் கம்  பெனி லிமிடெட் என்ற அரசு நிறுவனத்தை தனி யார்மயமாக்க பாஜக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 

தெலுங்கானா மக்கள் பாஜகவுக்கு 8  எம்.பி.க்களை கொடுத்துள்ளனர். இதனால் சிங்கரேணி நிலக்கரி நிறுவனத்தை கொல்ல முயற்சிக்கிறது. ஒருபுறம் நிலக்கரிச் சுரங்க  ஏலத்தை எதிர்ப்பது போன்று மாநில காங்கி ரஸ் அரசு வெளிக்காட்டிக்கொண்டு, மறு புறம் ஏலத்தில் பங்கேற்கிறது. இந்த விவ காரத்தில் தெலுங்கானா காங்கிரஸ் அரசுக்கு  தெளிவு இல்லை. அதனால் ஏலத்தை ரத்து  செய்து, 2 சுரங்கங்களையும் நேரடியாக சிங்க ரேணி அரசு நிலக்கரி நிறுவனத்திடம் ஒப்ப டைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். 

மேலும் நிலக்கரி சுரங்க ஏலத்தை எதிர்த்து  அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றி ணைந்து இரு நிலக்கரி சுரங்கங்களையும் சிங்கரேணியிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். சிங்கரேணியைக் காப்பாற்ற மக்களைத் திரட்ட வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்  டார்.